இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தோரை உலக நாடுகள் இலக்கு வைக்க வேண்டும்! - ஐநா மனித உரிமைகள் ஆணையர்

Human Rights Council Michelle Bachelet Sri Lanka
By Rakesh Sep 07, 2022 12:48 AM GMT
Report

"இலங்கையில் தேசிய மட்டத்தில் பொறுப்புக்கூறலுக்கான முன்னேற்றம் இல்லாத நிலையில், இலங்கையில் சர்வதேச சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்கும், விசாரணை செய்வதற்கும், வெளிநாட்டிலும் உலகளாவிய அதிகார வரம்பிலும் உள்ள வழிகளைப் பயன்படுத்தி பொறுப்புக்கூறல் முயற்சிகளை முன்னெடுக்குமாறு மற்ற நாடுகளைக் கோருகின்றோம்.

சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் மொத்த மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று நம்பத்தகுந்த வகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை குறிவைத்து மேலும் நடவடிக்கைகளை எடுங்கள்."

இவ்வாறு உலக நாடுகளை வலியுறுத்தியிருக்கின்றது ஜெனிவாவில் இயங்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபை. ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 51 ஆவது அமர்வு எதிர்வரும் 12ம் திகதி தொடங்க இருக்கையில், அதில் இலங்கை விடயம் முக்கியமாக முன்னெடுக்கப்படவிருக்கின்றது.

அதனையொட்டி, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அவதானிப்பு அறிக்கை வெளியாகியுள்ளது.

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தோரை உலக நாடுகள் இலக்கு வைக்க வேண்டும்! - ஐநா மனித உரிமைகள் ஆணையர் | 51St Session Of The Human Rights Council Sri Lanka

அரசுக்குப் புதிய வாய்ப்பு

இலங்கை தனது அரசியல் வாழ்வில் முக்கியமான கட்டத்தில் உள்ளது எனவும், அனைத்து சமூகங்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் மனித உரிமைகளைக் கடுமையாகப் பாதித்துள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் நாடு இருக்கின்றது எனவும் அறிக்கை ஒப்புக்கொள்கின்றது.

இது ஆழமான சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அனைத்து சமூகங்களிலிருந்தும் இலங்கையர்களின் பரந்த அடிப்படையிலான கோரிக்கைகளைத் தூண்டியுள்ளது. மேலும் நாட்டைஒரு புதிய பாதையில் வழிநடத்த அரசுக்குப் புதிய வாய்ப்பை வழங்குகின்றது என அறிக்கை தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும், நிலையான முன்னேற்றங்கள் நடைபெறுவதற்கு, கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்கள், பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் உள்ளூர் ஊழல்களுக்கும் தண்டனை விலக்களித்தல் உட்பட இப்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பங்களித்த அடிப்படை காரணிகளை அடையாளம் கண்டு, கவனித்து நிவர்த்தி செய்வது இன்றியமையாதது.

தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கும், கடந்த கால மனித உரிமை மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் அடிப்படை மாற்றங்கள் தேவைப்படும் என்று மனித உரிமைகளுக்கான உயர் ஆணையரின் அறிக்கை கூறுகின்றது.

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தோரை உலக நாடுகள் இலக்கு வைக்க வேண்டும்! - ஐநா மனித உரிமைகள் ஆணையர் | 51St Session Of The Human Rights Council Sri Lanka

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்  கைது 

கொடூரமான பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் அமைதியான போராட்டத்தின் மீதான ஒடுக்குமுறைகள் போன்றவற்றை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவும், இராணுவமயமாக்கல் நோக்கிய நகர்வை மாற்றியமைக்கவும், தனக்குள்ள புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பைக் காட்டுவதன் மூலம் பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களை ஏற்படுத்துவது மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு பெறுவதற்கான விடயத்தை முடிவுக்குக் கொண்டு வருவதை உறுதிப்படுத்துமாறு அறிக்கை அரசைக் கேட்டுக்கொள்கின்றது.

வெகுஜன எதிர்ப்புக்களுக்குப் பதிலளிப்பதில் பாதுகாப்புப் படைகள் சமீபத்தில் கணிசமான நிதானத்தைக் காட்டினாலும், அரசு கடுமையான அணுகுமுறையை எடுத்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சில மாணவர் தலைவர்களைக் கைது செய்தது மற்றும் அமைதியான போராட்டங்களை வன்முறை மூலம் ஒடுக்கியது.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் அதிக அளவில் இராணுவமயமாக்கப்பட்ட சூழல் மற்றும் கண்காணிப்பு கலாசாரம் தொடர்கின்றது.

நம்பகமான உண்மையைக் கண்டறியும் பொறிமுறை மற்றும் தற்காலிக சிறப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது உட்பட நிலுவையில் உள்ள கடப்பாடுகளைச் செயற்படுத்தக் காலக்கெடுத் திட்டத்துடன், நிலைமாறுகால நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய விரிவான மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட மூலோபாயத்தை மீண்டும் தொடங்குமாறு அறிக்கை புதிய அரசை வலியுறுத்துகின்றது.

அதேசமயம் அனைத்து பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துவதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கிய பங்கு வழங்கப்பட வேண்டும்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புகள் பற்றிய உண்மையை நிலைநாட்டுவதில் முன்னேற்றம் இல்லாதது குறித்து கவலையை வெளிப்படுத்தும் அறிக்கை, சர்வதேச உதவி மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் முழுப் பங்கேற்புடன், தொடர்ந்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு அழைப்பு விடுகின்றது.

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தோரை உலக நாடுகள் இலக்கு வைக்க வேண்டும்! - ஐநா மனித உரிமைகள் ஆணையர் | 51St Session Of The Human Rights Council Sri Lanka

பொறுப்புக்கூறலுக்கு அரசியல் தடைகள் 

இலங்கை அரசு, அடுத்தடுத்த அரசுகள் உட்பட, மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கும், உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளுக்கான பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும் பயனுள்ள நிலைமாறுகால நீதிச் செயன்முறையைத் தொடரத் தவறிவிட்டது என்று அறிக்கை குற்றஞ்சாட்டுகின்றது.

மாறாக, அவர்கள் பொறுப்புக்கூறலுக்கு அரசியல் தடைகளை உருவாக்கியுள்ளனர். மேலும், அரசின் மிக உயர்ந்த மட்டங்களில் போர்க்குற்றங்களில் நம்பத்தகுந்த வகையில் சம்பந்தப்பட்ட சில இராணுவ அதிகாரிகளை பதவி உயர்வு வழங்கி, தீவிரமாக ஊக்குவித்து, தங்களுடன் இணைத்துமுள்ளனர்.

தேசிய மட்டத்தில் பொறுப்புக்கூறலுக்கான முன்னேற்றம் இல்லாத நிலையில், இலங்கையில் சர்வதேச சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்கும், விசாரணை செய்வதற்கும், வெளிநாட்டிலும் உலகளாவிய அதிகார வரம்பிலும் உள்ள வழிகளைப் பயன்படுத்திப் பொறுப்புக்கூறல் முயற்சிகளில் ஒத்துழைக்குமாறு மற்ற நாடுகளை அறிக்கை வலியுறுத்துகின்றது.

கூடுதலாக, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் மொத்த மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று நம்பத்தகுந்த வகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் குறிவைத்து மேலும் நடவடிக்கைகளை ஆராயுமாறு அறிக்கை நாடுகளை வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 46/1 க்கு இணங்க, பொறுப்புக்கூறல் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலப் பணியின் முன்னேற்றத்தை அறிக்கை கோடிட்டுக் காட்டுகின்றது. மேலும் அதன் திறனை வலுப்படுத்த அழைப்பு விடுக்கின்றது.


மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US