இலங்கையைச் சேர்ந்த 11 இளைஞர்கள் இந்தியாவில் கைது
இலங்கையைச் சேர்ந்த 11 இளைஞர்கள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கனடா செல்ல முயற்சித்தமையினால் கைது செய்யப்பட்டு்ள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(5) இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோதமாக கனடா செல்ல முயற்சி

இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகம் சென்று, அங்கிருந்து கனடா செல்ல முயன்ற குற்றத்திற்காக 11 பேர் இந்தியாவின் கியூப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலுள்ள விடுதியொன்றில் இவர்கள் தங்கியிருப்பதாக கியூப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமையவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கடந்த மாதம் 19ஆம் திகதி விமானம் மூலம் சென்னைக்குச் சென்று அங்கிருந்து கேரளாவின் கடற்கரை நகரான கொள்ளம் பகுதிக்குச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் மேலதிக விசாரணைகளை தமிழக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri