திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 48வது தலைவராக அருள்வரதராஜா பதவியேற்பு
திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 48வது தலைவராக க.அருள்வரதராஜா உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.
இதற்கான நிகழ்வு நேற்றைய தினம் (25.07.2026) திருக்கோணமலையிலுள்ள டைக் வீதியில் அமைந்துள்ள ரோட்டரி இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.
கலந்து கொண்டவர்கள்
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் க.குணநாதன் பிரதம அதிதியாகவும், பேராசிரியர் வி.கனகசிங்கம் கௌரவ அதிதியாகவும், லங்கா ஐஓசி நிறுவனத்தின் சிரேஷ்ட உப தலைவர் நவீன் குமார் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், திருக்கோணமலை, கொழும்பு மற்றும் மன்னார் ரோட்டரி கழகங்களைச் சேர்ந்த ரோட்டேரியன்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ரோட்டராக்டர்கள், இன்டராக்டர்கள், ரோட்டேரியன் துணைவியர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் கழகத்தின் நண்பர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு ரோட்டரியின் நட்புறவையும் சேவை மனப்பான்மையையும் வெளிப்படுத்தினர்.









லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri