யாழ். சுன்னாகம் பகுதியில் மூவர் கைது
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் முனியப்பர் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வைத்து மூவர் சட்டவிரோத பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் நேற்றையதினம்(14.3.2026) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மூவர் கைது
இதன்போது ஒருவரிடமிருந்து வாளும், மற்றைய இருவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்ட. ஒருவரிமிருந்து 2 கிரம் 340 மில்லிகிராம் ஐஸும், மற்றையவர் இடமிருந்து 2 கிராம் 220 மில்லிகிராம் ஐஸும் மீட்கப்பட்டன.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri