அம்பாறையில் 20 பவுண் நகைகள் கொள்ளை: மூவர் கைது
அம்பாறை - சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 ஆம் கொலனி பகுதியில் பல இலட்சம் பெறுமதியான 20 பவுண் நகைகளை கொள்ளையிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (18.03.2024) இடம்பெற்றள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது சாளம்பைக்கேணியை சேர்ந்த 33, 26 மற்றும் 28 வயது மதிக்க தக்க சந்தேக நபர்கள் கைது செய்ப்பட்டதுடன் சந்தேக நபர்களால் கொள்ளையிடப்பட்ட 20 பவுண் நகைகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.
சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 ஆம் கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த வியாழக்கிழமை (14) இரவு ஜன்னல் உடைக்கப்பட்டு உள் நுழைந்தவர்களால் சுமார் 39 இலட்சத்திற்கும் அதிகமான 20 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளது.
இதனையடுத்து மறுநாள் (15) பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய சவளக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கல்முனை நீதிவானிடம் நேற்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 22 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
