யாழில் 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
வடக்கு கடல் பரப்பில் சுமார் 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (05.06.2024) இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
யாழ்ப்பாணத்தைச்(Jaffna) சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கேரள கஞ்சாவை படகில் ஏற்றிச் சென்ற போது கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளதுடன் 70 கிலோகிராம் கேரள கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மற்றும் அவர்களது படகும் மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![திடீரென சபதம் போட்ட மீனா, அதற்கான வேலையை செய்த முத்து, என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை புரொமோ](https://cdn.ibcstack.com/article/cb1d03e5-116e-4928-8fae-0ade27b8851c/24-667ce580d148e-sm.webp)
திடீரென சபதம் போட்ட மீனா, அதற்கான வேலையை செய்த முத்து, என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
![ஒரு குறிப்பிட்ட நாட்டவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று கூறிய பிரித்தானிய தலைவர்: உருவாகியுள்ள சர்ச்சை](https://cdn.ibcstack.com/article/fff158e5-6ef3-44b9-abf1-2ed3bcea9526/24-667d59cdcd2ba-sm.webp)
ஒரு குறிப்பிட்ட நாட்டவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று கூறிய பிரித்தானிய தலைவர்: உருவாகியுள்ள சர்ச்சை News Lankasri
![Neeya Naana: நீங்க யாருன்னு எனக்கு தெரியும்... நான் யாருனு உனக்கு தெரியும்... கோபிநாத்தின் பதிலடி](https://cdn.ibcstack.com/article/db7b429e-29ee-4ab3-9398-e904a0f16c1c/24-667dae4f818c2-sm.webp)