பொலிஸ் தடுப்புகாவலில் இருந்த 23வயது இளைஞருக்கு நேர்ந்த கதி..!
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று(05.07.2026) இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் போதைப்பொருள் தொடர்பில் கைதான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.
23 வயது இளைஞர் உயிரிழப்பு
உயிரிழந்தவரின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வருகை தந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதான சந்தேக நபர் போதைப்பொருள் உட்கொண்டு உயிரிழந்தாரா? அல்லது தடுத்து வைக்கப்பட்ட வேளை பொலிஸாரினால் தாக்கப்பட்டு உயிரிழப்பு இடம் பெற்றதா? என பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.