தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர்கூடத்தில் இன்று(25.07.2026) ஆரம்பமாகியுள்ளது.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் தலைமையில் நடைபெற்றுவரும் இந்நிகழ்வில், துணைவேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
சான்றிதழ்கள் வழங்கி வைப்பு
இளமானி மற்றும் முதுமாணி பட்டங்கள் வழங்கல் இன்றைய பட்டமளிப்பு விழாவில் கலை, கலாசாரம், மேலாண்மை, வர்த்தகம், பொறியியல், பயன்பாட்டு அறிவியல் மற்றும் இஸ்லாமியக் கற்கைகள் உள்ளிட்ட பல்வேறு பீடங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இளமானி (Undergraduate), முதுமாணி (Postgraduate) மற்றும் கலாநிதி பட்டங்கள் அதிகார பூர்வமாகச் சான்றிதழ்களுடன் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.








