16 தமிழக கடற்றொழிலாளர்கள் குறித்து பா.ஜ.க தலைவர் - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்!
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 16 தமிழக கடற்றொழிலாளர்களை மீட்க உதவி செய்யுமாறு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனை நேற்றைய தினம் (12.03.2023) ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்கள் விரைவில் நாடு திரும்புவதற்கு வெளியுறவு அமைச்சகம் தலையிட வேண்டும் என்று அண்ணாமலை கோரியுள்ளார்.

இந்திய கடற்றொழிலாளர்கள்
இந்த 16 கடற்றொழிலாளர்களும் இலங்கை கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக இலங்கை அதிகாரிகளால், இந்திய கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் குற்றம் சுமத்தியிருந்தது.
தமது கடற்றொழிலாளர்களுக்கு எதிராக வன்முறை, பிரயோகிக்கப்படாமல் இருப்பதை உறுதி
செய்ய வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்தை
வலியுறுத்தியிருந்தது.
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam