16 தமிழக கடற்றொழிலாளர்கள் குறித்து பா.ஜ.க தலைவர் - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்!
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 16 தமிழக கடற்றொழிலாளர்களை மீட்க உதவி செய்யுமாறு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனை நேற்றைய தினம் (12.03.2023) ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்கள் விரைவில் நாடு திரும்புவதற்கு வெளியுறவு அமைச்சகம் தலையிட வேண்டும் என்று அண்ணாமலை கோரியுள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்கள்
இந்த 16 கடற்றொழிலாளர்களும் இலங்கை கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக இலங்கை அதிகாரிகளால், இந்திய கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் குற்றம் சுமத்தியிருந்தது.
தமது கடற்றொழிலாளர்களுக்கு எதிராக வன்முறை, பிரயோகிக்கப்படாமல் இருப்பதை உறுதி
செய்ய வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்தை
வலியுறுத்தியிருந்தது.

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
