தென்சீனக் கடலை நோக்கி நகரும் அமெரிக்கா! காத்திருக்கும் பாரிய ஆபத்து
ஈரானுக்கு எதிரான யுத்தத்தில் டொனால்ட் ட்ரம்பை அரபிக் கடலில் நிறுத்தவில்லை என்றால் அவரின் அடுத்த பார்வை தென்சீனக் கடலை நோக்கியதாகவே இருக்கும். அது எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என நினைத்து கூட பார்க்க முடியாது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள்: பாதுகாப்பு தொடர்பில் ரஷ்யா மீது உலகத்திற்கு ஒரு நம்பிக்கை இருந்திருந்தால் அது கியூபா, வெனிசுவெலா, சிரியா போன்ற பிரச்சினைகளில் அந்த நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல், அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் யுத்தத்தில் அந்த நம்பிக்கைக்கு பாரிய பங்கம் ஏற்பட்டுள்ளது. உக்ரேன் யுத்தத்தின் போது ரஷ்யாவுக்கு ஈரான் ட்ரோன் மற்றும் கவச வாகனங்கள் அதற்கான தோட்டாக்களை வழங்கினர்.
அஞ்சாமல் அந்த சவாலுக்கு ஈரான் முகம் கொடுத்தது. ஆனால் ரஷ்யா அதற்கு எதிர்பார்த்த பிரதி உபகாரம் செய்யவில்லை.
ரஷ்யாவின் திட்டம்
ரஷ்யா இந்த போருக்கு நாங்களும் வருகிறோம் என அமெரிக்காவுக்கு அறிவித்திருக்கலாம். ஆனால் உக்ரேன் போரை வைத்துக் கொண்டு இன்னும் ஒன்றுக்கு செல்ல முடியாது.
கறுங் கடலுக்கு ( The Black Sea) பின்னால் இருப்பது ஈரானாகும்.அங்கு கலவரங்கள் மற்றும் குழப்பங்கள் ஏற்பட்டால் உக்ரேனை தவிர ரஷ்யாவின் ஸ்தீரதன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடிய புதிய எதிரி ஒருவர் உருவாக்கலாம்.
ஆனால் ரஷ்யாவுக்கு இதில் இலாபகரமான ஒரு பக்கமும் இருக்கிறது. உக்ரேனுக்கு அமெரிக்காவும் நோட்டோவும் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். அதற்கு முன்னே நாங்கள் தாக்குதல் நடத்தினோம் என ரஷ்யா உக்ரேனுக்கு தாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்த முடியும்.

இப்போது தான் ரஷ்யாவிடம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மண்டியிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எரிவாயு மற்றும் எரிபொருளில் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா வழங்கிய எரிபொருள்-எரிவாயு குழாய்கள் மூடப்பட்டுள்ளன. அவற்றை திறக்க சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு போடப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டியுள்ளது.
இது ரஷ்யாவுக்கு கிடைக்கும் மேலதிக நன்மைகள். இதனால் தான் ரஷ்யா ஈரானுக்கு உதவி செய்யவில்லை என நினைக்க கூடாது. அவர்களுக்கு இன்னுமொறு யுத்தத்திற்கு முன்வர முடியாத நிலையில் உள்ளனர்.
இந்த யுத்தத்தில் அடுத்து சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நாடு தான் சீனா.
சீனாவின் எதிர்கால நோக்கம்
பொருளாதார ஸ்தீரதன்மை மேலும் பல துறைகளில் உலகத்தில் அநேக நாடுகள் சீனா தொடர்பிலும் நம்பிக்கை வைத்துள்ளன. மேலும் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஆயுத பலத்தில் மண்டியிட வைக்க கூடிய ஒரே ஒரு சக்தி சீனாவிடம் தான் இருக்கிறது.
ஆனால் சீனா அதை பாவிக்காது. கரீபியன் (The Caribbean Sea) கடற் பரப்பிலிருந்து சீனாவின் கப்பல்களை விலத்தி கொண்டது அவர்களின் பின்வாங்கல் அல்ல. இப்போது தான் அவர்களின் பின்வாங்கல் ஆரம்பித்துள்ளது.
சீனா ஈரானில் பாரிய செயற்றிடங்களை மேற் கொண்டுள்ளது.தொடருந்து வலையமைப்பு மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு போன்றவற்றில் 200 பில்லியன் டொலர் முதலீடுகளை செய்துள்ளது.
மேலும் ஈரானின் இலாபகரமான எரிபொருள் மற்றும் எரிவாயுவிலேயே சீனாவின் பொருளாதாரம் தங்கியுள்ளது. சீனா 40 சதவீதம் எரிபொருளை ஈரானிடம் இருந்து பெற்றுக் கொள்கிறது.
இதெல்லாம் இப்போது வீணாகிவிட்டது.அமெரிக்காவின் ஒரு வியூகமே சீனாவை பொருளாதார ரீதியில் பயம் கொள்ள வைப்பதாகும். அத்தோடு சீனாவின் டேட்டா சென்டர்களுக்கும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

அதற்கு எதிராக ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் இருக்கும் டேட்டா சென்டர்களுக்கு தாக்குதல் நடத்தியுள்ளது. அத்தோடு சீனாவுக்கு எரிபொருள் கொண்டு செல்லும் தாங்கிகளுக்கும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
அதற்கு எதிர் தாக்குதலாக ஈரான் பிரித்தானியா அமெரிக்காவின் எண்ணெய் தாங்கிகளை தாக்கி அழித்துள்ளது. சீனா பழைய சோவியட் சங்கம் போல் இந்த போருக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால் சீனா கூட்டி கழித்து கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறது. ஈரானில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டால் அவர்களுடன் இணங்கி போய் தங்களின் காரியங்களை ஆற்றிக் கொள்வர்.
சீனா எதிர்காலத்துக்கான திட்டத்தை தீட்டுகின்றது. எதிர்கால நோக்கத்திற்காக சீனா பின்வாங்குகிறதா? ஆனால் டொனால் ட்ரம்பை அரபிக் கடலில் மூழ்கடிக்கவில்லை என்றால் ட்ரம்பம் தென் சீனக் கடலுக்கு கட்டாயம் வருவார்.அவ்வாறான ஒரு பலம் ட்ரம்புக்கு ஏற்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 11 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri