யாழ்.கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இரு படகுகளில் எல்லை தாண்டிய கடற்றொழிலாளர்களே இன்று (12.03.2023) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதில் காரைநகர் கடற்பரப்பில் நான்கு கடற்றொழிலாளர்களும் பருத்தித்துறை கடற்பரப்பில் 12 கடற்றொழிலாளர்களும் கைது செய்யப்பட்டவுடன் இவர்களுடைய இரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வளத்துறை திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டு 12 கடற்றொழிலாளர்கள் பருத்தித்துறை நீதிமன்றிலும் 4 கடற்றொழிலாளர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
