யாழ்.கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இரு படகுகளில் எல்லை தாண்டிய கடற்றொழிலாளர்களே இன்று (12.03.2023) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலை
இதில் காரைநகர் கடற்பரப்பில் நான்கு கடற்றொழிலாளர்களும் பருத்தித்துறை கடற்பரப்பில் 12 கடற்றொழிலாளர்களும் கைது செய்யப்பட்டவுடன் இவர்களுடைய இரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வளத்துறை திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டு 12 கடற்றொழிலாளர்கள் பருத்தித்துறை நீதிமன்றிலும் 4 கடற்றொழிலாளர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri