இந்திய கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணை: டக்ளஸ் தேவானந்தா உத்தரவு

Sri Lanka Police Indian fishermen Douglas Devananda India
By Kajinthan Feb 16, 2023 07:15 PM GMT
Report

இந்திய கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

அவ்வாறான சம்பவம் நடைபெற்றிருக்குமானால் கண்டிக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு சூழலிலும் யாரும் வன்முறைகளை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது எனவும், எமது தொப்புள்கொடி உறவுகள் பாதிக்கப்படாத வகையிலே இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணை: டக்ளஸ் தேவானந்தா உத்தரவு | Police Investigating About Indian Fishaman Attack

இந்தியக் கடற்றொழிலாளர்

இலங்கையின் கடல் வளத்தினை அழிக்கும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இராஜதந்திர ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அவை போதுமானளவு பலனளிக்காத நிலை காணப்படுகின்றது.

இந்திய கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணை: டக்ளஸ் தேவானந்தா உத்தரவு | Police Investigating About Indian Fishaman Attack

அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இந்தியத் தலைவர்களுடன் இது தொடர்பாக கலந்துரையாடி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் மற்றும் இந்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருடனும் இவ்விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்திருந்ததுடன், விரைவில் புதுடெல்லி மற்றும் தமிழகத்தின் மேலும் பல உயர் மட்டத் தலைவர்களையும் சந்தித்து பேச்சுக்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறான சூழலில்  இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத அத்துமீறல்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளதுடன் பொலிஸாருக்கு தேவையான ஆலோசனைகளை கடற்றொழில் அமைச்சர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவளை,காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரனினால் யாழ்.இந்திய துணை தூதுவராலயத்திற்கு சென்று இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக மகஜரொன்று இன்று கையளிக்கப்பட்டுள்ளது. 

மக்களின் கோரிக்கை 

இதேவேளை பிரதேச கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில், முல்லைத்தீவு – தியோநகர் கடற்கரை பகுதியில் சுமார் 58 ஏக்கர் நிலப் பகுதியை தனியார் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள பிரதேச மக்கள், குறித்த சட்ட விரோத செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர், பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.

இதனிடையே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கரைத்துறைப்பற்று உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று முல்லைத்தீவில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன், கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் கீபி உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

செய்தி-கஜிந்தன்


மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US