குருநாகல் பகுதியில் ஆசையுடன் டிராக்டரில் ஏறிய சிறுவனுக்கு நேர்ந்த கதி
குருநாகல் - கல்கமுவ பகுதியில் டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(26.02.2026) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறுவன் பயணித்துக்கொண்டிருந்த டிராக்டரில் சாரதி இருக்கைக்கு அருகில் ஏற முயற்சித்துள்ளார். இதன்போது, எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்த சிறுவன், டிரக்டரின் சக்கரத்தில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், மஹநான்னேரிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 11 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam