லண்டனில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு சம்பவம்
மேற்கு லண்டன் பகுதியில் 15 வயது சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லண்டன் மேற்கு பகுதியில் உள்ள Ladbroke Grove வில் நேற்று முன் தினம் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதன்போது அவசர ஊழியர்கள் மற்றும் நோயாளர் காவு வண்டி மூலம் உடனடி மருத்துவ உதவி கிடைத்த போதிலும், சம்பவ இடத்திலேயே அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த சம்பவத்தை கொலை வழக்காக கருதி லண்டன் பொலிஸ் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 1 மணி நேரம் முன்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri