முகமாலையில் கரோலஸ் மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியை ஆரம்பித்து 13 வருடங்கள் நிறைவு
கிளிநொச்சி - முகமாலைப் பகுதியில் கரோலஸ் மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியை ஆரம்பித்து 13 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில் தினமும் கரோலஸ் நிறுவனத்தில் 20 வருடங்களுக்கு மேலாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் பணியாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு கரோலஸ் முகமாலை அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
கரோலஸ் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் க.சிறீமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகமாலைப்பகுதியில் கண்ணிவெடி அகற்ற வேண்டிய 10.5 சதுரகிலோமீற்றர் பரப்பளவில் 6 சதுர கிலோமீற்றர் பகுதியில் கண்ணிவெடி அகற்றியுள்ளனர்.

சிறியவர்கள் முதல் பெரியோர் வரை ஆடைகளின்றி அடித்து கொலை செய்யப்பட்ட துயரம்! சபையில் நீண்ட வெளிப்படுத்தல்














உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri
