முல்லைத்தீவில் சித்த வைத்திய முகாம் ஆரம்பம்
பாரம்பரிய மருத்துவ முறைகளை மக்களிடம் அறிமுகப்படுத்தும் நோக்கில் சித்த வைத்திய முகாம் ஒன்று புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினால் மக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டமானது நேற்றையதினம்(03.05.2026) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பல்வேறு நோய்களுக்கு சித்த வைத்திய சேவைகள்
மக்கள் பாரம்பரிய வைத்திய முறைகளை கடைப்பிடித்து ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனேயே இந்த முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சித்த வைத்திய முகாமானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடம், வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை ஆகியவற்றின் இணைப்பில் நடத்தப்படுகிறது.

மேலும், இந்த முகாமில் கபம், சுரம், பித்தம், பீனிசம், ஆஸ்த்துமா, மூட்டு வாதம், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சித்த வைத்திய சேவைகள் வழங்கப்படுகின்றன.
அதேபோல் தொற்றும் மற்றும் தொற்றா நோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஐக்கிய இராச்சியம் (UOJAAUK) மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் நிதி அனுசரணையுடன் இடம்பெறுகின்றது.
அத்துடன், மக்களின் நலனுக்காக மாதந்தோறும் இரண்டு நாட்கள் இவ்வாறான சித்த வைத்திய முகாம்கள் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் வைத்தியர்கள், சித்த மருத்துவ மாணவர்கள், புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினர், தாதியர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்