நிலாந்தன் மகாதேவா, பத்தி எழுத்தாளராகவும் மூத்த ஊடவியலாளராகவும் அறியப்படுகின்றார. 40 வருடங்களுக்கும் மேற்பட்ட ஊடக அனுபவம் கொண்ட இவர் இலங்கை அரசியல் துறை விமர்சகராகவும், கட்டுரையாசிரியராகவும் திகழ்கின்றார்.
சிவில் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளராகவும் இவர் காணப்படுகின்றனர். இவருடைய அரசியல் விமர்சனம் மற்றும் அரசியல் கட்டுரைகளுக்கும், ஈழத்தமிழர் அரசியல் விவகாரங்கள் தொடர்பான விமர்சனங்களுக்கும் அதிகளவான வாசகர் குழாம் இருக்கின்றது. இதனைத் தவிர ஒரு ஆங்கில ஆசிரியராகவும் தன்னை இவர் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.