இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளான இளைஞர்களை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்ட எம்.பி(Photo)
முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினரால் இளைஞர்கள் தாக்குதலுக்குள்ளான சம்பவம் இடம்பெற்றது.
இதனையடுத்து குறித்த இளைஞர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அந்த இளைஞர்களை இன்றைய தினம் பார்வையிட்டுள்ளார்.
தாக்கப்பட்ட இளைஞர்கள்
இதன் போது இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தாங்கள் இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டதாவும் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்களை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோர் சென்றுள்ளனர்.