யாழில் இளைஞரொருவர் கூரிய ஆயுதத்துடன் கைது
யாழ்.கோப்பாய் மற்றும் கொக்குவிலில் இருவேறு வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 26 வயதுடைய கொலின் என்ற சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து கூரிய ஆயுதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 23 ஆம் திகதி கோப்பாய் மற்றும் கொக்குவில் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டு வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மானிப்பாய் புதுமடத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றங்களில் பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள்
நிலுவையில் உள்ளதென்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெங்கட் பிரபு படத்திற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா நடிகர் சிவகார்த்திகேயன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam