கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் தம்பதியர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அம்பாந்தோட்டை, ஹூங்கம பகுதியில் வீடொன்றினுள் 28 வயதான இளம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட 4 சந்தேகநபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதலும், துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹூங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாடிகல ரன்ன பகுதியில், உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த குழுவினர் வீட்டில் இருந்த இளம் தம்பதியினரைக் கொடூரமான முறையில் படுகொலை செய்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் ஹூங்கம பொலிஸார் மற்றும் தங்காலை குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய குற்றச் செயலுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
35 வயதுடைய பெண் ஒருவரும், 27 தொடக்கம் 33 வயதுடைய 3 ஆண்களும் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் ரன்ன பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது. சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்வாறு கைதான நபர்களிடமிருந்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் 12 ரக துப்பாக்கி, போர் 12 ரக 2 தோட்டாக்கள் மற்றும் ஒரு வெற்றுத் தோட்டாவும், 2 வெட்டுக் கத்திகளும் மீட்கப்பட்டன.
உயிரிழந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடும், கூரிய ஆயுதங்களால் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளமை பிரதேச பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் கஹந்தமோதர பகுதியில் கடந்த வருடம் மார்ச் மாதம் நபர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேகநபராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபர்கள் நேற்று அங்குனுகொலபெலஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
