பிரித்தானிய மகா ராணியின் மறைவு: முன்னாள் ஜனாதிபதியின் இரங்கல் செய்தி
பிரித்தானிய மகா ராணியின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தனது இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்

“பொதுநலவாய நாடுகளின் தலைவரும், பிரித்தானியாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியுமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இழப்பு குறித்து கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எனக்கு ராஜரீதியிலான வரவேற்பு அளித்ததற்காக நான் எப்பொழுதும் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அரச குடும்பத்திற்கும் பிரித்தானிய மற்றும் பொதுநலவாய மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri