வெள்ளவத்தையில் நடந்த பயங்கரம் - தமிழ் கடை உரிமையாளரால் பணியாளர் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு
கொழும்பு - வெள்ளவத்தையில் கொலை குற்றச்சாட்டின் பேரில் கடை ஒன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிய நபரை கொலை செய்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள தையல் நிலையம் ஒன்றில் பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உரிமையாளர் கைது
புஸ்ஸலாவை - எல்பொட தோட்டப் பகுதியைச் சேர்ந்த 42 வயதான தையல் நிலைய உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.
பிரேதப் பரிசோதனை
சந்தேகநபர் கல்கிஸ்ஸ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காகக் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
