பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இந்த ஆண்டு முதல் விவாகரத்து வழக்குகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு தேவையான ஆதாரங்களை வழங்குமாறு நீதிபதிகளுக்கு நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நீதி அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அனைத்து மாவட்ட நீதிபதிகள் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதிகளுக்கு அறிவித்துள்ளார்.
பதிவாளர் நாயகம் திணைக்களம், வருடாந்தம் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்கள் தொடர்பான தகவல்களை மாவட்ட மட்டத்தில் வெளியிட்டு வருகின்றது.
விவாகரத்து தொடர்பான தகவல் கோரிக்கைகள்
இதற்கமைய, விவாகரத்து தொடர்பான தகவல் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படுவதால், விவாகரத்து தொடர்பான ஆதாரங்களை இந்த ஆண்டு முதல் வெளியிட பதிவாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டு முதல் விவாகரத்து வழக்குகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு தேவையான தகவல்களை வழங்குமாறு நீதிபதிகளுக்கு நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 13 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam
