தென்னிலங்கையில் நட்சத்திர ஹோட்டலொன்றில் நடிகை உட்பட பெண்கள் கைது
நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளுக்கு வாகன சேவைகளை வழங்கி பெண்களை தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வந்த கும்பலொன்று கைது செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி நடவடிக்கை தொடர்பில் நடிகை உட்பட நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்கள் கம்பஹா, அம்பாறை, பொரலஸ்கமுவ, மாத்தறை, பைகம ஆகிய பகுதிகளை சேர்ந்த 25 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண்கள் விற்பனை
இந்த நடிகை பல கவர்ச்சியான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் தனது வாட்ஸ் அப் இலக்கத்தின் மூலம் 30,000 ரூபாயில் இருந்து பல்வேறு விலைகளில் பெண்களை விற்பனை செய்து வருகின்றமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan