வெளிநாடு சென்று டிக்டொக்கிற்கு அடிமையான தாய் - இலங்கையில் பரிதவிக்கும் குடும்பம்
டிக்டொக் சமூக வலைத்தளத்திற்கு அடிமையான இளம் மனைவி, குடும்பத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கணவனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தம்புள்ளையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு வீட்டை விட்டு சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஊடாக குவைத்திற்கு பணிப்பெண்ணாக மனைவி சென்றுள்ளார்.
டிக்டொக்கிற்கு அடிமை
இதன்போது டிக்டொக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் அதற்கு அடிமையானதாக பாதிக்கப்பட்ட கணவன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக குடும்பத்துடன் தொடர்பு கொள்வதை முற்றாக நிறுத்திய மனைவி, டிக்டொக்கில் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார்.
மனைவியின் செயற்பாட்டில் கடும் அதிருப்தி அடைந்த கணவன், மனைவி மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திடம் கோரியுள்ளார்.
பொலிஸாரின் உதவி
எனினும் குறித்த பெண் ஏற்கனவே இலங்கை வந்துள்ள நிலையில் வேறு நபருடன் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், பொலிஸாரின் உதவியுடன் அவரை தேடிப்பிடித்து வீட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளார்.
வீட்டுக்கு வந்த மனைவி சில தினங்களில் அனைவரையும் ஏமாற்றிய நிலையில் மீண்டும் தப்பிச் சென்றுள்ளதாக கணவன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
