அரச நிறுவனம் ஒன்றில் வழங்கப்படும் உணவில் கரப்பான்பூச்சி - அதிர்ச்சியில் ஊழியர்கள்
கொழும்பு துறைமுக சிற்றூண்டிசாலையில் கொள்வனவு செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் திகதி கிழக்கு கொள்கலன் முனையத்தின் ஊழியர்கள், சமையலறையிலிருந்து பெறப்பட்ட உணவுப் பொட்டலத்தில் கரப்பான் பூச்சி உள்ளமை கண்டுபிடித்துள்ளனர்.
கொழும்பு துறைமுக சமையலறையில் சமைக்கப்படும் உணவு தொடர்பிலும், அதன் நிர்வாகம் மற்றும் தரம் ஆகியவற்றில் கடுமையான விமர்சனங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தரமற்ற உணவு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கத்தியில் இருந்து உடைந்த சிறிய துண்டு ஒன்று உணவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழுவினால், சமையலறையில் உணவு பாதுகாப்பாக சமைக்கப்படுவதை உறுதி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் அண்மைய நாட்களால் சில தொழிற்சங்கங்களின் செல்வாக்கால், உணவுப் பாதுகாப்பு குறைந்துள்ளதாகவும் ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் செயற்பாடுகள் குறித்து துறைமுக ஊழியர்கள் கடும் கோபம் அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்.. கொந்தளித்த பராசக்தி பட நடிகர் Cineulagam
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri