அரச நிறுவனம் ஒன்றில் வழங்கப்படும் உணவில் கரப்பான்பூச்சி - அதிர்ச்சியில் ஊழியர்கள்
கொழும்பு துறைமுக சிற்றூண்டிசாலையில் கொள்வனவு செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் திகதி கிழக்கு கொள்கலன் முனையத்தின் ஊழியர்கள், சமையலறையிலிருந்து பெறப்பட்ட உணவுப் பொட்டலத்தில் கரப்பான் பூச்சி உள்ளமை கண்டுபிடித்துள்ளனர்.
கொழும்பு துறைமுக சமையலறையில் சமைக்கப்படும் உணவு தொடர்பிலும், அதன் நிர்வாகம் மற்றும் தரம் ஆகியவற்றில் கடுமையான விமர்சனங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தரமற்ற உணவு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கத்தியில் இருந்து உடைந்த சிறிய துண்டு ஒன்று உணவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழுவினால், சமையலறையில் உணவு பாதுகாப்பாக சமைக்கப்படுவதை உறுதி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் அண்மைய நாட்களால் சில தொழிற்சங்கங்களின் செல்வாக்கால், உணவுப் பாதுகாப்பு குறைந்துள்ளதாகவும் ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் செயற்பாடுகள் குறித்து துறைமுக ஊழியர்கள் கடும் கோபம் அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 3 நாட்கள் முன்
நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan