ஈரான் - இஸ்ரேல் போர் : 50 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணியை இழக்கும் இந்தியா
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்தி வரும் போர், இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, வளைகுடா நாடுகளில் பணிபுரியும் 91 இலட்சம் இந்தியர்கள் அனுப்பும் சுமார் 50 பில்லியன் டொலர் மதிப்பிலான அந்நிய செலாவணி வருமானம் (remittances) இந்த மோதலால் பெரும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள்
இந்த போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டிருப்பதால், உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் எரிபொருள் தேவையில் பெரும் பகுதி இந்த நீரிணை வழியாகவே வருவதால், இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்த மோதல் நீடித்தால், வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பல இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டுப் பொருளாதாரத்திற்குப் பெரும் பின்னடைவாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது (evacuation) என்பது ஒரு மிகப்பெரிய சவாலான காரியம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார பாதுகாப்பு என இரண்டிலும் இந்தியா நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், இந்திய அரசு நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த போர் இந்தியாவிற்கு நீண்டகால அடிப்படையில் எரிசக்தி மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 4 மணி நேரம் முன்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri