கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு பெண் கொலை! சந்தேகநபர் தலைமறைவு
பலாங்கொடை- பல்லேவெல பகுதியில் உள்ள வீட்டொன்றில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத்தொடர்ந்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனை நடத்த திட்டம்
பல்லேவெல பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த குறித்த பெண் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை- பிரதம நீதிபதி, நீதித்துறை மருத்துவ கண்காணிப்பாளர், குற்ற நிகழ்வு விசாரணை அதிகாரிகள் மற்றும் கைரேகை பிரிவு அதிகாரிகள் நேற்று (23) பிற்பகல் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, இரத்தினபுர பொலிஸ் மோப்ப நாயை கொண்டு சந்தேகநபரை தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய, சடலத்திற்கான பிரேத பரிசோதனை இன்று (24) பலாங்கொடை பொது மருத்துவமனையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்னவல பொலிஸார் நடத்தி வருகின்றனர்.
அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! வாக்கெண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 12 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri