கிராண்ட்பாஸ் விபத்தில் பெண் ஒருவர் மரணம்! சடலம் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்
கொழும்பு மாவட்டம், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், உயிரிழந்த பெண் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
ஒருகொடவத்தை சந்தியிலிருந்து ஆமர் வீதி பாபர் சந்தி நோக்கிப் பயணித்த பாரவூர்தி ஒன்று வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ள கிராண்ட்பாஸ் பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan