ஆயித்தியமலையில் மதுபான போத்தல்களுடன் பெண் கைது
மட்டக்களப்பு - ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மதுபானப் போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆயித்தியமலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயித்தியமலை 9ஆம் கொளனி எனும் இடத்தில், பெண் ஒருவர் தனது வீட்டில் கால்போத்தல் அளவு கொண்ட 57 மதுபான போத்தல்களை தன் வசம் வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்டதன் பேரில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணையும், கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளார்.


விபத்து நடைபெற்ற விமானத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பு பயணித்த பயணி முன்கூட்டியே எச்சரிக்கை News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri
