மன்னாரில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள்! ஜனாதிபதிக்கு சென்ற கடிதம்

Mannar Anura Kumara Dissanayaka Sri Lanka Gautam Adani
By Ashik Jan 14, 2026 06:31 AM GMT
Report

மன்னாரில் காற்றாலை திட்டத்தை திறக்க வரும் முன் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களையாவது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுவிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (13) அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மன்னார் மக்களின் கூட்டு கோரிக்கை

மன்னார் தீவு பகுதிக்குள் காற்றாலை, கனிம மண் அகழ்வு திட்டங்கள் வேண்டாம் எனும் மன்னார் மக்களின் கூட்டு கோரிக்கையை அடியோடு நிராகரித்து ஆட்சியாளர்கள் தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பது கடும் விசனத்துடன் ஆழ்ந்த கவலை அடைகின்றோம். 'ஜனநாயகம் என்பது வலிமை அற்றவர்கள் கடலுக்குள் உப்பை கரைப்பதற்கு ஒப்பானது'.

மன்னாரில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள்! ஜனாதிபதிக்கு சென்ற கடிதம் | Wind Farm Project Mannar President Urgent Letter

சமத்துவம் என்பது உதட்டளவில் அல்ல அது சமூக சமநீதியாக செயல் வடிவம் பெற வேண்டும். இனத்துவ மொழித்துவ பிரதேசத்துவ வேறுபாடுகள் அடிப்படையில் பௌத்த தேசியவாத இனவாத அடக்குமுறை கோட்பாட்டை பஞ்சசீல சித்தாந்தம் இன்றி அடிப்படை வாதமாகவே மேலெழுந்தது. அதனால் தான் இந்த நாட்டில் 70 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டிமை வாத அடக்குமுறையை அணைய விடாமல் பிரகாசித்து பாதுகாத்து ஆட்சி மாறினாலும் கட்சி மாறினாலும் வழி வரைபடம் மாறுவதில்லை என்பதே கசப்பான உண்மை.

பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் நீதி 'நிர்விகல்ப சமாதியாகவே' நீளுறக்கம் கொள்கிறது. சபிக்கப்பட்ட இனமாகவே தமிழ் மக்கள் வாழ்வியல் தொடர்கிறது. 13.08.2025 அன்று தங்களை சந்தித்தபோது மன்னார் மக்களின் விருப்புக்கு மாறாக செயல்பட போவதில்லை என உறுதி கூறினீர்கள்.

மன்னாரில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள்! ஜனாதிபதிக்கு சென்ற கடிதம் | Wind Farm Project Mannar President Urgent Letter

மன்னார் மாவட்டம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அதன் இயல்பை கெடுக்காமல் பாதுகாப்பதே அவசியமாகும். எமது மக்களின் கூட்டு கோரிக்கையை குழி தோண்டி புதைத்து விட்டு திட்டமிட்டபடி 14 காற்றாலை பணிகளும் நடைபெறுகின்றன.

கனிம மணல் அகழ்வு முற்றாக நிறுத்தப்படும் என எமக்கு கூறினீர்கள். ஆனால் கனிம மண் அகழ்வுக்குரிய இரண்டு நிறுவனங்களும் தமது செயற்பாட்டை தொடர்ந்த வண்ணமே உள்ளனர். அதானிக்கு வழங்க இருந்த 52 காற்றாலைக்குரிய இடங்களும் வேலை நிறுத்தப்படவில்லை.

காணி சுவீகரிப்பு

அதானியின் கம்பெனி தான் வெளியேறியதே தவிர திட்டம் முழுமையாக கைவிடப்படவில்லை. காணி சுவீகரிப்பும் நிறுத்தப்படவில்லை. இரண்டு லட்சத்து இருபத்தி ஓராயிரத்து இரு நூற்றி இருபது ஹெக்டேர் (221,220) நிலம் மன்னார் மாவட்டத்தில் வன திணைக்களம், வன விலங்குகள் திணைக்களத்தினாலும் வர்த்தமானிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது .

இதில் 35,750 ஏக்கர் நிலம் வளம் மிக்க பயிர்ச்செய்கை க்குரிய இடமாகும் .அதில் 108 குளங்களும் உள்ளடங்குகின்றன. இதனை விடுவிக்குமாறு தங்களிடம்  கோரியபோது ஆறு மாதத்துக்குள் விடுவிப்பதாக கூறினீர்கள் . இதுவரை ஏதும் நிகழவில்லை.உரித்து நிர்ணயம் செய்யப்பட்ட காணியை கூட பயன்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

மன்னாரில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள்! ஜனாதிபதிக்கு சென்ற கடிதம் | Wind Farm Project Mannar President Urgent Letter

ஏழைகள் வாழ்வாதாரத்திற்கு பாலைப் பழம் பிடுங்குவதற்கு கூட முடியாத மிக மோசமான அடக்குமுறையை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அடிப்படை உரிமையும் நசுக்கப்படுகிறது. புதிதாக குடியேறுவதற்கு ஒரு துண்டு நிலம் கூட இல்லை .

முப்படைகளுக்கும் பௌத்த கோயில்கலையும் கட்டமைப்பதற்கு எந்தச் சட்டமும் கட்டுப்படுத்துவதில்லை. மன்னாரின் வளத்தையும் சுரண்டி வாழ்வியலையும் கெடுப்பது நியாயம் தானா? தற்போதைய இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட இதுவரை முறையாக நிவாரணம் கிடைக்கவில்லை.

பாட்டாளி வர்க்கத்தின் கூட்டாளி எனக் கூறும் தாங்கள் எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு காற்றாலை திட்டத்தை திறக்க வரும் முன் இந்த நிலங்களையாவது விடுவியுங்கள் எமது மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட வீடு : ஆபத்தான பொருளுடன் சிக்கிய இளைஞர்

கொழும்பில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட வீடு : ஆபத்தான பொருளுடன் சிக்கிய இளைஞர்

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US