இரட்டைவேடம் போடும் அர்ச்சுனா எம்.பி..! குற்றஞ்சாட்டும் விமல் வீரவன்ச

Sri Lankan Tamils Wimal Weerawansa Ramanathan Archchuna
By Shadhu Shanker Sep 18, 2026 11:02 AM GMT
Report

உதவி செய்யும் போது நல்லவராகத் தெரிந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, எதிர்க்கட்சிக் களத்தில் இணைந்த பின்னர் தமிழினப் பிரிவினைவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.

புலம்பெயர் தமிழர்கள்

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது புலம்பெயர் தமிழர்களின் பணத்தைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து, தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவரே இராமநாதன் அர்ச்சுனா என விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அப்போது அனைவருக்கும் நல்லவராகத் தெரிந்த அவர், தற்போது எதிர்க்கட்சிக் களத்தில் இணைந்த பின்னர் வேறு விதமான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

அண்மையில் தெற்கில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய அர்ச்சுனா, தனது வாழ்நாளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனியான தமிழீழம் உருவாக இடமளிக்கப் போவதில்லை என்றும், தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் மோதலில் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்ததாக விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

அர்ச்சுனாவின் குறித்த கருத்துக்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 இதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி திலீபனுக்கு சிலை அமைக்கப்பட்டு, மக்கள் அவரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதாகவும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

திலீபனின் சிலை

திலீபனின் பெயரைப் பயன்படுத்தி சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறுவதைத் தடுப்பது உள்ளிட்ட பிரிவினைவாதக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

திலீபன் விடுதலைப் புலிகள் அமைப்பின் லெப்டினன்ட் கர்னல் தரத்தில் இருந்தவர் என்றும், அவர் ஒரு பயங்கரவாதி என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

இரட்டைவேடம் போடும் அர்ச்சுனா எம்.பி..! குற்றஞ்சாட்டும் விமல் வீரவன்ச | Wimal Weerawansa Make Controversial Remark Archuna

இவ்வாறான நிலையில், திலீபனின் சிலையை நிறுவி அவருக்கு அஞ்சலி செலுத்தியதாகக் கூறப்படும் தமிழ் தேசியவாதக் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், நாட்டின் சட்டத்தைப் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் தீவிரவாத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பெறப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.

விமல் வீரவன்சவின் பேரணிப் பேச்சு! பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

விமல் வீரவன்சவின் பேரணிப் பேச்சு! பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சவூதியில் கைதான இலங்கை இளைஞன் அனோஜனுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சவூதியில் கைதான இலங்கை இளைஞன் அனோஜனுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US