முள்ளியவளை மத்தி கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மத்திய கிராமத்திற்குள் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டுயானை ஒன்று மக்களின் காணிகளை சேதப்படுத்தியுள்ளது.
குறித்த காட்டு யானை நேற்றிரவு (07.10.2024) கிராமத்திற்குள் புகுந்துள்ளது.
கிராமத்திலுள்ள வீடு ஒன்றின் 10 அடி நீளம் கொண்ட மதிலினை சேதப்படுத்தியுள்ளதுடன் அருகில் உள்ள வீடு ஒன்றில் உள்ள தென்னை, வாழை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
கிராம மக்களிடையே அச்சம்
இதனையடுத்து, நடுக்கிராமத்துக்குள்ளால் சென்ற யானை, மறுபக்கத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளது.
இந்த சம்பவம் முள்ளியவளை மத்தி கிராம மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் யானையால் ஏற்பட்ட அழிவுகள் தொடர்பில் கிராம சேவையாளர் நேரடியாக சென்று பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
