நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? கல்வியமைச்சு வெளியிட்ட புதிய தகவல்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமையினால் பாடசாலைகளை திறக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கல்வி அமைச்சர் அறிவிப்பார் என அவர் என கூறியுள்ளார்.
தற்போது கொழும்பு மாவட்டத்தில் ஆசிரியர்களில் 99 வீதமானேருக்கும், களுத்துறை மாவட்டத்தின் ஆசிரியர்கள் 99 வீதமானோருக்கும் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்த மாதம் 22ஆம் திகதிக்குள் நாட்டின் அனைத்து ஆசிரியர்களுககும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுவிடும்.
ஆசிரியர்கள் ஒன்லைன் கற்கை நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார்கள் . இது மாணவர்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பம்.
ஆசிரியர் - அதிபர் சம்பளமத்திற்கு நியாயம் கிடைக்கும். ஜனாதிபதி இது தொடர்பில் தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து வருகிறார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri