யாழ். மக்களால் பெருமிதம் கொள்கின்றோம்! - சீனத் தூதரகம் டுவிட்
யாழ்ப்பாணம் மக்களால் பெருமிதம் கொள்வதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இதனைக் குறிப்பிட்டு சீனத் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.
"கடந்த வாரம் சீன மக்கள் நன்கொடையளித்த சினோபார்மின் 50 ஆயிரம் தடுப்பூசிகளை ஏற்றும் யாழ்ப்பாணம் மக்களைக் கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம்.
அதேவேளை, முன்னணி சுகாதாரப் பணியாளர்கள், முப்படையினர் ஆகியோருக்கும் மரியாதை செலுத்துகின்றோம்" - என்று பதிவிடப்பட்டுள்ளது.
யாழ்பாணத்தைச் சேர்ந்த 50 ஆயிரம் பேருக்கு #சீன மக்கள் கடந்த வாரம் நன்கொடையாக வழங்கிய #சைனோஃபர்ம்# தடுப்பூசி போடும் பணி தொடங்கியது, எங்களுக்கு பெருமையும் ஊக்கமும் தந்துள்ளது.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) June 2, 2021
முன்னணியில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கும் முப்படைவீரர்களுக்கும் மனமார்ந்த மரியாதையைத் தெரிவிக்கிறோம்.
🙏 pic.twitter.com/uML9f2AlhU
You My Like This Video