இணையத்தளங்களில் விளம்பரங்கள் பதிவிடும் மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
இணையத்தளங்களில் விளம்பரங்கள் பதிவிடும் மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கிக் கணக்கில் இருந்து 569,610.00 ரூபாய் மோசடி செய்ததற்காக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மோசடி, முறைகேடு
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மோசடி, முறைகேடு மற்றும் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய ஒரு சந்தேக நபரும், அதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த 3 சந்தேக நபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 38 வயதுடையவர்கள், தெஹிதெனிய, முருத்தலாவ பகுதியை சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இணையத்தளத்தில் தண்ணீர் இறைக்கும் மோட்டார் இயந்திரத்தை விற்பனை செய்வதற்காக நபர் ஒருவர் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு
இதன்போது மோசடியாளர்கள் விற்பனையாளருக்கு முன்பணம் வழங்குவதாக கூறி, அவரது வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட OTP எண்ணைப் பெற்று, இந்தப் பணத்தை விற்பனையாளரிடம் இருந்து மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலஸாரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றப் புலனாய்வுத் துறையின் வடமேல் மாகாண பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan