அரசாங்கத்தின் தடை! அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Video)
கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிக்கப்படாமல் தேங்கியுள்ளமையால் சந்தையில் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுமென அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திறந்த கணக்குகள் மூலம் இறக்குமதி செய்வதை தடை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கையினால் அவ்வகையில் இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 500 கொள்கலன்களை விடுவிக்க முடியாதுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,