பங்களாதேஷ் புதிய பிரதமருக்கு அமைச்சர் நளிந்த நேரில் வாழ்த்து
பங்களாதேஷின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள தாரிக் ரஹ்மானை, இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று நடைபெற்ற புதிய பிரதமரின் பதவியேற்பு விழாவில், இலங்கை அரசின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கலந்து கொண்டார்.
நீண்டகால இருதரப்பு உறவுகளை பலப்படுத்தல்
பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பில், இலங்கை - பங்களாதேஷ் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது.
குறிப்பாக, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் சுகாதாரத் துறைக்குத் தேவையான மருந்துப் பொருட்களைப் பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விசேட கவனம் செலுத்தினார்.
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
பொருளாதார வளர்ச்சி
இது தொடர்பான வர்த்தக மேம்பாடுகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பங்களாதேஷின் பொருளாதார வளர்ச்சிக்குத் தங்களது உழைப்பின் மூலம் பங்களிப்பு வழங்கும் இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்து அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இலங்கைத் தொழிலாளர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதாகப் பங்களாதேஷ் பிரதமர் இதன்போது உறுதியளித்தார். இந்தச் சந்திப்பானது தெற்காசியப் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் மனிதாபிமான உறவுகளைப் புதிய கட்டத்துக்கு இட்டுச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri