காத்திருப்பு முடிந்தது: ஐபிஎல் தொடரை வென்ற பெங்களூர்
புதிய இணைப்பு
நடந்து முடிந்த 18ஆவது ஐபிஎல் தொடரை ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி கைப்பற்றியது.
பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தியுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்குளூரு அணி 20 ஓவர் நிறைவில் 9 விக்கட் இழப்புக்கு 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
After 18 years finally virat kohli lifting the IPL trophy 🏆 we'll deserve congratulations RCB👏#IPLFinal #ViratKohli𓃵 pic.twitter.com/6sE0unMMJE
— Kiran Khan (@HelloKiranKhan) June 3, 2025
191 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியால் 184 ஓட்டங்களையே பெற முடிந்தது.
இதற்கமைய பெங்களூர் அணி தமது முதலாவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.
போட்டியின் ஆட்ட நாயகனாக 17 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய க்ருணால் பாண்டியா தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாம் இணைப்பு
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் பெங்குளூரு அணி வெற்றியிலக்காக 191 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்குளூரு அணி 20 ஓவர் நிறைவில் 9 விக்கட் இழப்புக்கு 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பெங்குளூரு அணிக்காக விராட் கோலி 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
முதலாம் இணைப்பு
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் தற்போது துடுப்பெடுத்தாடிவரும் பெங்குளூரு அணி தற்போது வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ளது.
விராட் கோலியின் நிதான துடுப்பாட்டத்தின் மூலம் பெங்குளூரு அணி 12 ஓவர் நிறைவில் நூறு ஓட்டங்களை கடந்துள்ளது.
எனினும் 15ஆவது ஓவரில் அஸ்மதுல்லாஹ் ஓமர்சாய் வீசிய பந்துவீச்சில் விராட் கோலி ஆட்டமிழந்தமை பெங்குளூரு அணி ரசிகர்களுக்கு எமாற்றத்தை அளித்திருக்கும்.
மாபெரும் ஐபிஎல் வரலாற்று சாதனை
இந்த போட்டியில் விராட் கோலி 86 ஓட்டங்களை பெற்றிருந்தால் மாபெரும் ஐபிஎல் வரலாற்று சாதனை கோலியின் வசமாகியிருக்கும்.
இதுவரை ஐபிஎல் வரலாற்றில் மூன்று வெவ்வேறு தொடர்களில் எந்த ஒரு வீரரும் 700 ஓட்டங்களை எடுத்ததில்லை.
இந்த நிலையில், விராட் கோலி 86 ஓட்டங்களை பெற்று இந்த ஆண்டு 700 ஓட்டங்களை எடுத்தால், முதன்முறையாக மூன்று வெவ்வேறு தொடர்களில் 700 ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை கிடைத்திருக்கும்.
பஞ்சாப் அணி
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் கலத்தடுப்பை தேர்வுசெய்துள்ளது.
18 ஆண்டுகளில் இரு அணிகளும் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.
இதனால் ஐபிஎல் தொடரின் புதிய சாம்பியனாக உருவாகப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது. அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் முக்கிய போட்டியாகும்.
