18 வருட கால கனவு: மழை காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்!
ஐபிஎல் என்பது வியாபாரம், விளையாட்டு என்பதையும் தாண்டி தற்போது உணர்வுபூர்வமான விடயமாக மாறியுள்ளது.
அதிலும் 18 வருடமாக இரு அணிகள் கோப்பைகளை வெற்றிக்கொள்ளாமல் இருக்கும் போது அணி வீரர்களும் உரிமையாளர்கள் மற்றும் இரசிகர்கள் என ஒவ்வொருவரின் எதிர்ப்பார்ப்பும் அந்த கோப்பையின் மீதே உள்ளது.
18 வருட கால கனவு
அந்தவகையில், 18ஆவது ஐ.பி.எல்.தொடர் கடந்த மார்ச் 22ஆம் திகதி தொடங்கிய நிலையில் இன்று(3) இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இரு அணிகளும் 18 கால ஐபிஎல் வரலாற்றில் ஒரு முறை கூட கோப்பையை ஜெயித்ததில்லை.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
அந்தவகையில் இன்றையபோட்டியில் ஜெயிக்கும் அணி தனது முதலாவது கோப்பையை கைப்பற்றும். ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இந்த சீசனில் வலுவாக விளங்கி வருகின்றது.
லீக் சுற்றில் 9 வெற்றியுடன் 2ஆவது இடம் பிடித்த பெங்களூரு அணி முதலாவது தகுதி சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி 4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்துள்ளது.
முதலாவது தகுதி சுற்றில் பெங்களூருவுக்கு எதிராக 101 ஓட்டங்களில் படு தோல்வியடைந்த பஞ்சாப் அணி 2ஆவது தகுதி சுற்றில் மும்பைக்கு எதிராக எழுச்சி கண்டு 204 ஓட்டங்களை ஒரு ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்து அபாரமான வெற்றியை பதிவு செய்து 2ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.
மேலும் அந்த அணி இந்த சீசனில் 8ஆவது முறையாக 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளது.
ஸ்ரேயஸ் ஐயர்
அணித்தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் இன்றைய போட்டியில் வெற்றிப்பெற்றால் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளுக்கு கோப்பையை வென்று கொடுத்த முதல் அணித்தலைவர் என்ற பெருமையை பெறுவார்.
அதுமட்டுமன்றி 3 வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்குள் அழைத்து சென்ற பெருமையும் ஸ்ரேயஸ் ஐயரருக்கு உண்டு. நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை மோதி இருக்கின்றன.
முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், அடுத்த 2 ஆட்டங்களில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன.
மழையால் பாதிக்கப்பட்டால்
இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஜூன் 4 ஆம் திகதி ரிசர்வ் டே அறிவிக்கப்படும். அந்த நாளிலும் போட்டி மழையால் கைவிடப்பட்டால் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
முன்னதாக நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையிலான தகுதி சுற்று 2 ஆட்டம் மழை காரணமாக 2.15 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
புள்ளிப்பட்டியலில் நெட் ரன் ரேட்டின் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலிடத்தில் இருப்பதால் அந்த அணிக்கே கோப்பை வழங்கப்படும்.
எனவே 18 வருட கால கனவை எந்த அணி நனவாக்க போகின்றது என்று பார்க்கலாம்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

மாஸ் வெற்றிப் படமாக அமைந்த சூரியின் மாமன் மொத்தமாக செய்துள்ள வசூல்.. அடேங்கப்பா இத்தனை கோடியா? Cineulagam
