கர்நாடகாவில் வன்முறை: மதக்கலவரம் இல்லையென்று மாநில அரசாங்கம் அறிவிப்பு
கர்நாடக மாநிலத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவம், மதக்கலவரம் அல்லவென்று கர்நாடக அரசாங்கம் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கர்நாடகா, நாகமங்கலா நகரில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இரண்டு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது.
வன்முறை சம்பவம்
இதன்போது 20 வியாபாரத்தளங்கள் வரை தீயிடப்பட்டுள்ளதுடன் சம்பவங்கள் தொடர்பில் 53 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இது தற்செயலாக நடந்த சம்பவம் என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நேற்று(12) இரவு விநாயகர் சிலை ஒன்றை நீர்நிலையில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச்சென்றபோதே இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது.

எனினும், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கர்நாடக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan