அனுரவின் ஆட்சியில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்: விஜித ஹேரத் உறுதி
அனுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அமைச்சரவை எண்ணிக்கை 25 ஆக வரையறுக்கப்படும் எனவும், அமைச்சருக்கு ஆலோசனை வழங்கச் சபையொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரை மாத்திரமே தற்போது தெரிவு செய்துள்ளோம்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் பிரதமர் யார், வெளிவிவகார அமைச்சர் யார், அமைச்சரவைக்கு நியமிக்கப்படும் நபர்கள் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
எனினும், அமைச்சரவையின் எண்ணிக்கை 25 ஆகவும், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 25 ஆகவும் காணப்படும்.
அமைச்சருக்கு ஆலோசனை வழங்கச் சபையொன்று நிறுவப்படும். அதில் துறைசார் நிபுணர்கள் இருப்பார்கள்.
அவர்களுக்குச் சம்பளம், சலுகைகள் வழங்கப்படமாட்டாது என்பதுடன் அவர்கள் தன்னார்வ அடிப்படையில் சேவையாற்றுவார்கள்” என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
