வெலிகம படுகொலை விவகாரம்! சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தீவிரப்படுத்தப்படும் விசாரணை
வெலிகம பிரதேச சபையின் தலைவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணை
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று(23.10.2025) வெலிகம பிரதேச சபையில் தன்னுடைய அறைக்குள் அமர்ந்திருந்த போது கையெழுத்து வாங்குவதற்காக வருகைத் தந்ததாக தெரிவித்த அடையாளம் தெரியாத சந்தேகநபர்களால் வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
கறுப்பு நிறம் முகமூடிகளை அணிந்த இருவரே இவ்வாறு வருகைத் தந்து துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தமை சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், குறித்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிம்மதியாக இருக்க கொடைக்கானல் சென்ற ஜனனி தேடிவந்த ஆபத்து... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri