வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை! விசாரணைகள் ஆரம்பம்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வெலிகம பிரதேச சபையின் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் லசந்த விக்ரமசேகர இன்று காலை அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
விசாரணைகள்....
பிரதேச சபைக்குள் தன்னுடைய கதிரையில் அமர்ந்திருந்த போது, கடிதம் ஒன்றில் கையெழுத்து வாங்க வந்ததாக தெரிவித்து வந்த இருவர் பிரதேச சபையின் தலைவரின் நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.

இந்தநிலையில், சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச காரசாரமாக கருத்து வெளியிட்ட போது சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலளிக்கும் விதமாக உரையாற்றும் போது, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri