இஸ்ரேலின் பேருந்து தரிப்பிடத்தின் மீது மோதிய வாகனம் : விசாரணைகள் தீவிரம்
இஸ்ரேலின் (Israel) டெல் அவிவ் அருகில் உள்ள சந்திப்பகுதியில்,பேருந்து நிறுத்தத்தின் மீது நேற்று (27) கனரக வாகனம் ஒன்று மோதியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது ஒருவர் கொல்லப்பட்டதோடு 40 பேர் வரை காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் படையினரும் அடங்குகின்றனர்.
இந்தநிலையில் இது பயங்கரவாத தாக்குலாக இருக்கலாமா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு பாதுகாப்பின் தீவிரத்தன்மை
இராணுவ தளத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
தாக்குதல் நடத்தியவர் மத்திய இஸ்ரேலில் உள்ள கலன்சாவே பகுதியைச் சேர்ந்த இஸ்ரேலிய அரேபியர் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையிலான போருக்கு மத்தியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம், இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பின் தீவிரத்தன்மையை உணர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

காருக்குள் 45 நிமிடம் உரையாடிய புடின் - மோடி: அமெரிக்காவின் டிரம்புக்கு உருவாகும் புதிய அழுத்தம்! News Lankasri
