வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய உடைப்பு! மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை (Photos)
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
பிராந்திய இணைப்பாளர் பார்வையிட்டுள்ளார்.
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வைக்கப்பட்ட சிவன் சிலைகள் மற்றும் வழிபாட்டு பொருட்கள் உடைத்து எறியப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இன்று (30.03.23) மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எம்.ஆர். பிரியதர்சன சென்று பார்வையிட்டுள்ளார்.
வெடுக்குநாறி மலை
வெடுக்குநாறி மலைக்கு செல்வதற்கு முன்னர் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு தகவல் அறிந்து கொண்டுள்ளதை தொடர்ந்து வெடுக்குநாறி மலைக்கு சென்று ஆலய சூழல் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் நேரடியாக ஆராய்ந்துள்ளார்.
வெடுக்குநாறி மலை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளை
முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.




ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 18 மணி நேரம் முன்

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு News Lankasri

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri
