வவுனியா - கொழும்பு புதிய சொகுசு சேவை ஆரம்பம்: வெளியான தகவல்
வவுனியாவில் இருந்து கொழும்பிற்கான புதிய சொகுசு பேருந்து சேவை ஒன்று இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலையினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்துச் சேவை, வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 09.05 க்கு புறப்பட்டு புத்தளம் வழியாக கொழும்பை சென்றடையும்.
புதிய பேருந்து சேவை ஆரம்பம்
வவுனியா சாலைக்கு சொந்தமாக சொகுசு பேருந்துகள் இல்லாத நிலையில் அனுராதபுரம் சாலைக்கு சொந்தமான பேருந்தின் மூலம் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சேவையானது, முதற்கட்டமாக ஒரு வழிப்பாதை கொண்டதாக அமைந்துள்ளதுடன் வரும் காலங்களில் அது விஸ்தரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியாவில் இருந்து கொழும்பிற்கு ஒரு பயணிக்கு 1460 ரூபா கட்டணமாக அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆரம்ப நிகழ்வில் வவுனியா சாலையின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
