வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கல் நிகழ்வு: பெருந்திரளாக வரும் மக்கள்
முல்லைத்தீவு (Mullaitivu) - வற்றாப்பளை (Vattappalai) கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகள், இன்று (20.05.2024) அதிகாலை 3 மணியில் இருந்து நடைபெற்று வருகின்றன.
இதற்கமைய, அதிகாலை தொடக்கம் பூஜைகள் நடத்தப்பட்டு வருவதுடன் மக்கள் பெருந்திரளாக வருகை தந்து தங்கள் நேர்த்திகடன்களைச் செலுத்துகின்றனர்.
நேர்த்திக் கடன்கள்
இதன்போது, காவடி, பறவைக்காவடி மற்றும் பாற்செம்பு போன்ற நேர்த்திக்கடன்களினை நிறைவேற்றுவதில் பக்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமாத்திரமன்றி, அதிகாலையில் இருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் எல்லா வீதிகளிலும் பக்தர்கள் கால்நடையாக ஆலயத்திற்கு சென்று நேர்த்திகடன் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெருமளவு பக்தர்களை உள்ளீர்த்து வைகாசிப் பொங்கல் நிகழ்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி-சதீசன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam