பொலிஸ் சேவையில் இணைய சந்தர்ப்பம்: தமிழ் மொழியில் அதிக வெற்றிடங்கள்
இலங்கை பொலிஸ் சேவையில் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் மலையக பகுதியில் தமிழ் மொழியில் சேவையாற்றுவதற்கு அதிக வெற்றிடம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அதற்கான தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மலையகத்தை பொறுத்தமட்டில் பல இளைஞர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக காணப்படுகின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
வெற்றிடங்கள்
மலையக பொலிஸ் நிலையங்களிலேயே அதிக அளவில் வெற்றிடங்கள் காணப்படுகின்றது.

எனவே, தாமதிக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதோடு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மலையக பொலிஸ் நிலையங்களிலேயே நியமனம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான பிரச்சினையைத் திசை திருப்ப முயலும் இந்திய அரசியல் : கச்சதீவு தொடர்பில் பழ.நெடுமாறன் காட்டம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan