டெங்கு நோயாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் புதிய முறை அறிமுகம்
டெங்கு நோயாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த தடுப்பூசி வழங்கும் புதிய முறை இன்றைய தினம் (28.06.2023) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முறையின் மூலம் நோயாளர்கள் பதிவாகும் பகுதிகளைக் கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என அதன் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயாளர்கள்
மேலும், இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் 48, 246 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 10,626 டெங்கு நோயாளர்களும் கொழும்பு மாவட்டத்தில் 10,316 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
